கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து விஜயின் தேர்தல் பரப்புரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க முடிவு எடுத்துள்ள அவர், பரப்புரை பயணத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டு வருகிறார். அதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முதல் மாநிலம் வரையிலான நிர்வாகிகள் நியமனத்தை விரைந்து முடிக்கவும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
