விஜய் ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த பாடகர் என்பதும் அனைவரும் அறிந்ததுதான். இவர் இதுவரை நடித்த படங்களில் ஒரு பாடல் கண்டிப்பாக இவருடைய குரலில் இடம்பெற்றிருக்கும். அப்படி அவர் பாடிய பாடலும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அதுவும் ஆரம்பத்தில் இருந்து தற்போது ரிலீசான கோட் படம் வரை எல்லா படங்களிலும் விஜய் கட்டாயம் பாடியிருப்பார். கிட்டத்தட்ட இவர் அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடியுள்ளார். விஜய் இந்த அளவுக்கு பாடுகிறார் என்றால் அவருடைய அம்மா மற்றும் மாமா இருவருமே பின்னணி பாடகர்கள் தான். அதனால்தான் விஜய்க்கும் இப்படி ஒரு திறமை உள்ளது.

விஜய் நடித்த தொட்டபெட்டா பாடலை விஜயும் அவருடைய அம்மாவும் தான் சேர்ந்து பாடினர். அதுவும் தற்போது வரை அனைவருக்கும் பிடித்தமான பாடல்களாகவே உள்ளது. விஜய் படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே அவர் பாடுவாரா என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும். விஜய் ஒரு பாடலை பாடுகிறார் என்றால் அந்த படத்தின் இசை அமைப்பாளர் அந்த பாடலுக்கு கூடுதல் கவனம் செலுத்துவார்கள். அதனால்தான் அவர் பாடும் பாடல் இன்றுவரை சூப்பர் ஹிட் ஆகிக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத்தை பற்றி விஜய் பகிர்ந்த ஒரு தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் நடித்த திருப்பாச்சி, புலி மற்றும் சச்சின் என பல படங்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தவர். இவரை இசையமைத்ததில் தன் படமான சச்சின் படத்தில் கண்மூடி திறக்கும் பாடல் தான் எனக்கு எப்போதுமே ஃபேவரைட் பாடல் என்று விஜய் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த பாடலுக்குப் பிறகு என் படங்களில் அதே மாதிரியான மெலடி பாடல் இன்னும் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும் என்று விஜய் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். விஜய் தற்போது நடித்துவரும் ஜனநாயகன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகின்றார்.
