பெயரில் மட்டும்தான் கிறிஸ்தவர்.. “சொந்தக் குடும்பத்தையே காப்பாற்ற முடியாதவர்”…. விஜய்யை கிழித்துதொங்கவிட்ட வியாசர்பாடி அருட்தந்தை….!

Spread the love

அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தீவிரமாக இறங்கியுள்ள சூழலில், அவர் மீதான விமர்சனங்களும் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, தவெக தலைவர் விஜய் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இரு தொகுதிகளுமே சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் கொண்டவை என்பதால், அங்கு ‘சி. ஜோசப் விஜய்’ என்ற பெயரில் அவர் களமிறங்குவது அரசியல் ஆதாயத்திற்காகவே என்ற பேச்சுக்கள் பரவலாக எழுந்துள்ளன.

இந்நிலையில், வியாசர்பாடி பேராலய அருட்தந்தை சார்லஸ் குமார் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விஜய் பெயரளவில் மட்டுமே கிறிஸ்தவராக இருப்பதாகவும், அவர் செயல்பாடுகளில் அந்த அடையாளம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். “பெயரில் மட்டும் கிறிஸ்தவராக இருந்தால் போதாது, அந்தப் பெயருக்குத் தகுந்தாற்போல் செயல்படுபவர்களுக்குத்தான் எங்கள் வாக்கு” என்று அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூகப் பங்களிப்பு குறித்தும் அருட்தந்தை கேள்வி எழுப்பியுள்ளார். “சொந்தக் குடும்பத்தையே காக்க முடியாத ஒருவரால் எப்படித் தமிழ் நாட்டு மக்களைக் காப்பாற்ற முடியும்?” என்று வினவிய அவர், விஜய் இதுவரை எந்தவொரு மக்கள் போராட்டத்திலோ அல்லது தமிழ் மொழிக்கான குரலிலோ பங்கெடுக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். விஜய் இன்னும் ஒரு முழுமையான அரசியல்வாதியாக மாறவில்லை என்றும், சினிமா பாணியிலேயே அரசியலை அணுகுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இறுதியாக, மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர்களுக்கே சிறுபான்மையினரின் ஆதரவு இருக்கும் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மத்திய பாஜக அரசு தமிழுக்கும் தமிழகத்திற்கும் வஞ்சித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அத்தகைய சக்திகளுடன் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ கைகோர்ப்பவர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார். மதப் பிரிவினையைத் தூண்டாத, ஆர்.எஸ்.எஸ்-ன் கைப்பாவையாக இல்லாத ஒரு தலைமையையே மக்கள் எதிர்பார்ப்பதாக அவர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

Nanthini

Share
Published by
Nanthini

Recent Posts

ரொம்ப ஆட்டம் போட்ட இப்படித்தான் ஆகும்…! போதையில் கார் மேல் ஏறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த ஷாக்… திட்டி தீர்க்கும் இணையவாசிகள்..!!

மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…

12 minutes ago

பதைபதைக்கும் வீடியோ..! மரத்தில் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு… உடலில் மிளகாய்ப் பொடி தூவி ரத்தம் சொட்டச் சொட்ட கொடூரம்.. பழைய பகையை தீர்க்க இப்படியொரு கொடூரமா??

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…

15 minutes ago

“அம்மா துடிதுடிக்க செத்ததை பார்த்தேன்” குழந்தையின் கண்முன்னே… தாயை கொன்று தூக்கிலிட்ட கொடூரம்… வரதட்சணைக்காக இப்படியா..? சிறுவனின் பகீர் வாக்குமூலம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…

19 minutes ago

“சீனாவுக்கு நான் தரும் கிப்ட்” அதிபர் ஷி ஜின்பிங் என்னைக் கட்டிப்பிடித்து வரவேற்பார்… ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் போட்ட ‘மாஸ்’ பதிவு..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…

31 minutes ago

“டேய் திரும்பிப் பாக்காம ஓடுங்கடா” மனிதர்களே தேவையில்லை… தானாகவே காட்டுப்பன்றிகளை விரட்டும் ரோபோ… வைரலாகும் வீடியோ இதோ..!!

போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…

38 minutes ago