பெயரில் மட்டும்தான் கிறிஸ்தவர்.. “சொந்தக் குடும்பத்தையே காப்பாற்ற முடியாதவர்”…. விஜய்யை கிழித்துதொங்கவிட்ட வியாசர்பாடி அருட்தந்தை….!

Spread the love

அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தீவிரமாக இறங்கியுள்ள சூழலில், அவர் மீதான விமர்சனங்களும் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, தவெக தலைவர் விஜய் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இரு தொகுதிகளுமே சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் கொண்டவை என்பதால், அங்கு ‘சி. ஜோசப் விஜய்’ என்ற பெயரில் அவர் களமிறங்குவது அரசியல் ஆதாயத்திற்காகவே என்ற பேச்சுக்கள் பரவலாக எழுந்துள்ளன.

இந்நிலையில், வியாசர்பாடி பேராலய அருட்தந்தை சார்லஸ் குமார் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விஜய் பெயரளவில் மட்டுமே கிறிஸ்தவராக இருப்பதாகவும், அவர் செயல்பாடுகளில் அந்த அடையாளம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். “பெயரில் மட்டும் கிறிஸ்தவராக இருந்தால் போதாது, அந்தப் பெயருக்குத் தகுந்தாற்போல் செயல்படுபவர்களுக்குத்தான் எங்கள் வாக்கு” என்று அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூகப் பங்களிப்பு குறித்தும் அருட்தந்தை கேள்வி எழுப்பியுள்ளார். “சொந்தக் குடும்பத்தையே காக்க முடியாத ஒருவரால் எப்படித் தமிழ் நாட்டு மக்களைக் காப்பாற்ற முடியும்?” என்று வினவிய அவர், விஜய் இதுவரை எந்தவொரு மக்கள் போராட்டத்திலோ அல்லது தமிழ் மொழிக்கான குரலிலோ பங்கெடுக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். விஜய் இன்னும் ஒரு முழுமையான அரசியல்வாதியாக மாறவில்லை என்றும், சினிமா பாணியிலேயே அரசியலை அணுகுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இறுதியாக, மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர்களுக்கே சிறுபான்மையினரின் ஆதரவு இருக்கும் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மத்திய பாஜக அரசு தமிழுக்கும் தமிழகத்திற்கும் வஞ்சித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அத்தகைய சக்திகளுடன் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ கைகோர்ப்பவர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார். மதப் பிரிவினையைத் தூண்டாத, ஆர்.எஸ்.எஸ்-ன் கைப்பாவையாக இல்லாத ஒரு தலைமையையே மக்கள் எதிர்பார்ப்பதாக அவர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

Nanthini

Recent Posts

என்னது இது..? பிளிங்கிட்டில் ஆர்டர் செய்த பொருளைப் பார்த்ததும் புத்தி மாறிய டெலிவரி பாய்.. பெண் வாடிக்கையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி..!!

ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியில் ஆன்லைன் தளம் மூலம் ஆர்டர் செய்த பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு, டெலிவரி ஊழியரால் நேர்ந்த…

5 minutes ago

பரிட்சை எழுத வந்த இடத்தில் இப்படியா..? கால்வாயின் மேல்தளம் உடைந்து.. 25 மாணவர்கள் உள்ளே விழுந்த சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பி.எட். நுழைவுத் தேர்வு மையத்திற்கு வெளியே, சாக்கடைக் கால்வாயின் கான்கிரீட் மூடி உடைந்ததில்…

8 minutes ago

“அப்பா என் புருஷன் வீட்டில் பிரச்னை வந்தா” மகள் கேட்ட அந்த ஒரு கேள்வி… சொல்வதறியமால் கண்ணீர் விட்ட பெற்றோர்கள்…!!

தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…

17 minutes ago

அதிமுக தொண்டர் தற்கொலை.. “பிளீஸ் இனி யாரும் இப்படி செய்யாதீங்க” நா தழுதழுக்க பேசிய எடப்பாடி பழனிச்சாமி…!!

"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…

24 minutes ago

விதிமுறைகளை மீறி ‘ரீல்ஸ்’ போடும் தவெக MLA-க்கள்… அரசு அதிகாரிகளுடன் வெடித்த மோதல்… TVK அரசுக்கு புதிய சிக்கல்..!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில்…

29 minutes ago