தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் இந்த முறை ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருவதால் தேர்தல் களம் ஒவ்வொரு நொடியும் பரபரப்பாகவே உள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர்களை கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாவட்டச் செயலாளர்கள் தாங்கள் தினமும் மேற்கொள்ளும் பணிகளை மாவட்ட பொறுப்பாளர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். . இதற்காக வருவாய் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது.
