தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தவர் இயக்குனர் விக்ரமன். இவர் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். இவருடைய படங்கள் எல்லாம் குடும்பப்பாங்கான மற்றும் பெண்களின் மீதான சமூக அக்கறையை மையமாகக் கொண்டது. இவர் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த புதுவசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். இவரின் முதல் படமே தமிழக அரசின் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்திற்கான இரண்டு விருதை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து, பெரும்புள்ளி கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக சூர்ய வம்சம், உன்னை நினைத்து, வனத்தைப்போல உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கினார். இதில் பூவே உனக்காக திரைப்படம் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர் பல பிரபலமான நடிகர்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மகன் விஜய் கனிஷ்காவும் தற்பொழுது திரையுலகில் ஹீரோவாக களமிறங்கி கலக்கி வருகிறார். இவர் கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘நினைத்தது யாரோ’ என்கிற படத்தை தான் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு பின்னர் எந்த படங்களையும் இயக்கவில்லை . சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் தனது மனைவியை குறித்து கூறியிருந்தார். அதில் அவர் கூறியதாவது, ‘தன்னுடைய மனைவிக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால், திரைப்படங்கள் இயக்கவில்லை என்றும்,
தன் மனைவி ஜெயப்ரியா ஒரு நடன கலைஞர் என்றும், 4000 மேடைகளில் ஆடியவர் என்றும் கூறினார். இவருக்கு உடலில் ஏற்பட்ட பிரச்சனைக்காக மேற்கொண்ட சிகிச்சை தவறாகி போன காரணத்தால், 5 வருடங்களாக படுத்த படுக்கையாக இருக்கும் ஜெயப்ரியாவால் தன்னுடைய வேலைகளை கூட செய்து கொள்ளமுடியாது என்றும் கூறினார். அதனால் தான் மனைவியின் அருகிலேயே இருந்து அவரை கவனித்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவ்வளவு நடந்தும் திரையுலகம் இதை கண்டுகொள்ளாமல் இருப்பதும் அதிர்ச்சியளிக்கும் வகையில் தான் உள்ளது.
நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…