தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன். இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து ‘ஆக்சன் கிங் அர்ஜுன்’ என்று ரசிகர்களால் கொண்டப்படுகிறார். இவர் தற்பொழுது வெளியான நடிகர் விஜயின் லியோ திரைப்படத்தில் கூட ஹரால்டு தாஸாக நடித்து அசத்தியிருந்தார். நடிகர் அர்ஜுன் நிவேதிதா என்ற கன்னட நடிகையை திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, ரஞ்சன் என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிப்பு மற்றும் மாடலிங் துறையின் மீது ஆர்வம் கொண்டவர். இவர் விஷால் நடித்த ‘பட்டத்து யானை’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் ‘சொல்லி விடவா’ என்ற படத்திலும் நடித்தார்.
பட வாய்ப்புகள் இன்றி தற்பொழுது உள்ளார். சினிமாவில் மார்க்கேட் இல்லாததால் குடும்பத்தொழிலை கவனித்து வரும் ஐஸ்வர்யா ரசிகர்கள் மத்தியில் தனது பிரபலம் குறையாமல் இருக்க சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்தும் வருகிறார். நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி மற்றும் ஐஸ்வர்யா நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும், இவர்கள் இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நேற்று சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில் நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…