புது ரேஷன் கார்டு ரெடி …. தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பிறந்தநாளில் முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் மாஸ் கிஃப்ட்…!

Spread the love

தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், தகுதியான குடும்பங்களுக்கு அரசின் சார்பில் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ₹1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ரேஷன் கார்டு கட்டாயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய கார்டுகளுக்கான விண்ணப்பங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் முதல் சுமார் 2.25 லட்சம் புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர சரிபார்ப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதன் முதற்கட்டமாக, தற்போது தகுதியான 46,000 பயனாளிகளின் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அச்சிடப்பட்டு விநியோகத்திற்குத் தயாராக உள்ளன.

இந்த புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கும் திட்டத்தை, தமிழக முதலமைச்சர் விஜய் ஜூன் 22 அன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு, அவர்தம் சொந்த தொகுதியான பெரம்பூரில் நடைபெறும் சிறப்பு விழாவில் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கித் தொடங்கி வைக்கிறார். மீதமுள்ள விண்ணப்பங்களும் தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு, வரும் மாதங்களில் தகுதியானவர்களுக்குப் படிப்படியாகப் புதிய கார்டுகள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே, புதிய ரேஷன் கார்டுகள் தேவைப்படும் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் விரைவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்கள் எளிதாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், ரேஷன் திட்டத்தில் முறைகேடுகளையும் போலி கார்டுகளையும் ஒழிக்கும் நோக்கில், தமிழக அரசு e-KYC சரிபார்ப்பைக் கட்டாயமாக்கி தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டை (PHH) பிரிவைச் சேர்ந்த கார்டுதாரர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கார்டில் இடம்பெற்றுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களின் அருகில் உள்ள நியாய விலைக் கடைக்குச் சென்று விரல்ரேகை அல்லது கண்கருவிழி (Iris) சரிபார்ப்பு மூலம் தங்களது e-KYC பதிவை உடனடியாக முடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வெளிமாவட்டம் அல்லது வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள், தங்களுக்கு அருகில் இருக்கும் எந்தவொரு ரேஷன் கடையிலும் இந்த e-KYC சரிபார்ப்பை எளிதாகச் செய்துகொள்ளலாம் என நுகர்வோர் பாதுகாப்புத் துறை குறிப்பிட்டுள்ளது. மேலும், ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க, நீக்க அல்லது முகவரி மாற்றம் செய்ய விரும்பும் பொதுமக்கள், அரசின் அதிகாரப்பூர்வ TNPDS இணையதளமான www.tnpds.gov.in அல்லது அதற்கான மொபைல் செயலியைப் பயன்படுத்திப் பயன் பெறலாம். உண்மையிலேயே உதவி தேவைப்படும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் உதவிகள் தடையின்றிச் சென்றடைவதை உறுதி செய்ய அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Nanthini

Recent Posts

“அறிவாலயத்தில் திடீர் பூகம்பம்”…. தவெகவை எதிர்கொள்ள ஸ்டாலின் போட்ட சீக்ரெட் பிளான்…. தொண்டர்களுக்கு மேலிடம் போட்ட உத்தரவு…..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றித் கழகத்திடம் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, அண்ணா அறிவாலயத்தின் நீண்ட அமைதியை உடைக்கத் திமுக…

2 minutes ago

செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வரும் புதிய RTO விதிமுறை…. வாகன ஓட்டிகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!

தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை அச்சிடப்பட்ட அட்டைகளாக தபால் மூலம் அனுப்புவதற்குப் பதிலாக, மின்னணு (டிஜிட்டல்)…

14 minutes ago

“எம்.எல்.ஏ-க்கள் சொன்னா செல்லாது”…. விஜய் பிரதமர் விவகாரத்தில் அமைச்சர் வெங்கடரமணன் போட்ட திடீர் ‘யூ-டர்ன்’… பரபரப்பு பேட்டி…!

தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக தவெக…

22 minutes ago

BREAKING: ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து…. ஒருவர் பலி, பலர் சிக்கியதாக அச்சம்…. பதறவைக்கும் கள நிலவரம்….!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில், மருந்து கலவை தயாரிக்கும் பணியின் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட…

33 minutes ago

சேலத்தை உலுக்கிய கொடூரம்…. குடிநீர் தொட்டியில் துண்டு துண்டாக சாக்கு மூட்டை… பின்னணியில் காதலர்கள் போட்ட பகீர் பிளான்…. வெளிச்சத்திற்கு வந்த திடுக்கிடும் உண்மை….!

சேலம் அரிசிபாளையத்தில் நடைபெற்ற கொடூரமான கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரிசிபாளையத்தைச் சேர்ந்த ரமேஷ்…

39 minutes ago

“கறிக்குழம்பு வைக்கலையா?”…. ஒரு கிண்ணம் குழம்புக்காக மனைவியை உயிரோடு முடித்த கணவன்… நெஞ்சை நடுங்க வைக்கும் கொடூரம்….!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் அருகே உள்ள பாரசேரி பகுதியைச் சேர்ந்த ரஷீத் என்பவர், கறிக்குழம்பு சமைக்காத ஆத்திரத்தில்…

43 minutes ago