BREAKING: விஜய்க்கு அதிர்ச்சி… சற்றுமுன் வெளியான திடீர் அறிவிப்பு… செம ஷாக்கில் தொண்டர்கள்…!

By Nanthini on மார்கழி 15, 2025

Spread the love

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற போகும் சட்டமன்றத் தேர்தல் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் வருகை என்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தினமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் சமீப காலமாகவே தமிழக வெற்றி கழகம் கட்சியின் முக்கிய அமைச்சர்களின் வருகையும் தொண்டர்களின் இணைவும் அதிகரித்து வருகிறது. அதன்படி அண்மையில் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை காரணமாக அதிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தார். இவருக்கு கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் செங்கோட்டையன் தீவிரம் காட்டி வருகின்றார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் தனது தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கியுள்ள விஜய் சமீபத்தில் புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தை நடத்தி முடித்தார். இந்நிலையில் ஈரோட்டில் டிசம்பர் 18ஆம் தேதி அன்று விஜய் ரோடு ஷோ நடத்த போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. மேலும் 43 நிபந்தனைகளுடன் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து குழந்தைகள், கர்ப்பிணிகள் வரவேண்டாம், வாகனத்தில் வேகமாக வரக்கூடாது மற்றும் மின் கம்பங்களில் ஏறக்கூடாது என தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் தொண்டர்களுக்கு பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது..