BIG BREAKING: “C.ஜோசப் விஜய் எனும் நான்” முதலமைச்சராக பதவியேற்றார் விஜய்… நாடே மகிழ்ச்சியில்..!!

By Soundarya on வைகாசி 10, 2026

Spread the love

தமிழக அரசியல் வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10) தமிழ்நாட்டின் 17-வது முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்குப் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வருடன் சேர்த்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், அருண்ராஜ் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, திராவிடக் கட்சிகள் அல்லாத ஒரு புதிய சக்தியின் ஆட்சியைத் தமிழகத்தில் நிலைநிறுத்தியுள்ளது.

இந்த விழாவில் தேசிய மற்றும் மாநில அரசியலின் முக்கியத் தலைவர்கள் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர். குறிப்பாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் கலந்து கொண்டது அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடன் சிபிஐ, சிபிஎம் மற்றும் விசிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுப் புதிய அரசுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நேரு விளையாட்டரங்கம் தொண்டர்களின் ஆரவாரத்தால் நிரம்பி வழிந்த நிலையில், புதிய அமைச்சரவை இன்று முதல் தனது பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.