BREAKING: நாகை தேர்தல் பரப்புரை… திடீரென மன்னிப்பு கேட்ட விஜய்…!

By Nanthini on புரட்டாதி 20, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் தன்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரத்தை கடந்த வாரம் திருச்சியில் தொடங்கினார். திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த கையோடு அரியலூர் சென்று இருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் தேர்தல் பிரச்சாரத்திற்காக விஜய் நாகை வந்துள்ளார். பலவிதமான கட்டுப்பாடுகளுக்கு நடுவே விஜய் நாகையில் சற்று முன் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

நாகையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய் தனது முதல் கட்ட பரப்புரையின் போது பெரம்பலூர் செல்ல முடியாமல் போனது. அதற்காக பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மக்கள் பிரச்சனை குறித்து பேச போனாளே தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு பல தடைகள் விதிக்கப்படுகிறது. என்ன ஸ்டாலின் சார், மிரட்டி பாக்குறீங்களா, இதற்கு எல்லாம் இந்த விஜய் அஞ்ச மாட்டான் என்று சூளுரைத்துள்ளார்.