இறந்த மகள் குறித்து முதல்முறையாக சோசியல்மீடியாவில் பதிவிட்ட விஜய் ஆண்டனி… என்ன சொல்லியிருக்கிறார்..?

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமாக வலம் வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர்  தனது குடும்பத்துடன் சென்னை டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். இவரது மகள் மீரா 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு மீரா வீட்டில் உள்ள தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

   

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மீரா கடந்த ஒரு வருடமாக மனஅழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது.  மன அழுத்தம் காரணமாக அவர் இப்படியொரு விபரீத முடிவை எடுத்துள்ளார் என தெரியவந்தது. மேலும் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் தனது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார்.

அதில்  Love You All, miss You All எனவும் குறிப்பிட்டு இருந்தார். நேற்று காலை மீராவின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. நுங்கப்பாக்கத்தில் உள்ள சர்ச்சில் வைத்து இறுதி பிரார்த்தனை செய்யப்பட்டதை அடுத்து மீராவின் உடல் கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறைத்தோட்டத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

தற்பொழுது விஜய் ஆண்டனி தனது மகள் குறித்து சோசியல் மீடியாவில் உருக்கமாக கடிதம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ‘ என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். தற்போது அவள் ஜாதி, மதம் , பணம் , பொறாமை அற்ற அமைதியான இடத்திற்கு சென்று இருக்கிறாள். நான் இப்பொது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன் . அவள் பெயரில் நான் செய்ய போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்’ என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவானது அனைவரையும் கலங்க வைத்துள்ளது. இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Vijay Antony (@vijayantony)