கடந்த 1982 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் தான் காதல் ஓவியம். உணர்ச்சிபூர்வமான காதல் கதைகளைக் கொண்டு உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில் ராதா, கண்ணன், கவுண்டமணி, ராதாரவி மற்றும் மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் கதாநாயகனாக நடித்திருந்தவர் தான் நடிகர் கண்ணன். இந்த திரைப்படத்தில் இவருடைய சிறப்பான நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இவர் ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்திற்குப் பிறகு அவரை வேறு எந்த திரைப்படத்திலும் காண முடியவில்லை.

இந்த நிலையில் கிட்டத்தட்ட சுமார் 40 வருடங்களுக்கு மேலாக சினிமா பக்கமே வராத கண்ணன் தற்போது விஜய் ஆண்டனி திரைப்படம் மூலமாக ரீ என்ட்ரி கொடுக்க உள்ளாராம். அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் சக்தி திருமகன் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் காதல் ஓவியம் பட ஹீரோ கண்ணன் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே காதல் ஓவியம் படத்திற்குப் பிறகு ஏன் இவ்வளவு இடைவேளை என்று சமீபத்திய பேட்டியில் பதிலளித்த கண்ணன், காதல் ஓவியம் படத்திற்கு முன்னதாக பெங்காலி படம் ஒன்றுக்காக சென்றிருந்தேன். அந்தப் படத்தின் ஆடிஷனில் செலக்சன் ஆகவில்லை. அதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். அப்போது காதல் ஓவியம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என தெரிவித்துள்ளார். இப்போது கண்ணனுக்கு 60 வயது ஆகும் நிலையில் இன்னும் ஸ்மார்ட் ஆக உள்ளார். விஜய் ஆண்டனி படத்தில் இவர் மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
