விஜய்-சங்கீதா சமரசம்… பிரச்னை ஓய்ந்தது… முதன்முறையாக மனம் திறந்த தந்தை எஸ்.ஏ சந்திரசேகர்..!!

By Soundarya on சித்திரை 21, 2026

Spread the love

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்துப் பரவி வரும் விவாகரத்து வதந்திகளுக்கு விஜய்யின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் விளக்கமளித்துள்ளார். நீண்ட காலத்திற்கு முன்பே அவர்களுக்குள் சமரசமாகி கையெழுத்தான ஒரு பழைய விஷயத்தை, இப்போது மீண்டும் திட்டமிட்டு யாரோ கிளப்பி விடுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றித் தேவையில்லாத விவாதங்கள் உருவாக்கப்படுவதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் பழைய விவகாரத்தை இப்போது பெரிதாக்குவதற்குப் பின்னால் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என்றும் எஸ். ஏ. சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக எதிர்க்கட்சிகள் இதனை அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பிரிந்து வாழ்வதாக எழும் கேள்விகளுக்கு இது ஒரு முற்றுப்புள்ளியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.