கோமாளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன். கவிமோகன் ஹீரோவாக நடித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து பிரதீப் ரங்க நாதன் இயக்கி அவரே ஹிரோவாக நடித்திருந்த திரைப்படம் தான் லவ் டுடே. செல்போனை வைத்துக் கொண்டு இப்போதுள்ள இளைஞர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை இந்த படம் போட்டுக் காட்டி இருந்தது. இந்தப் படமும் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் இனி மேல் தான் இயக்கும் படங்களில் தானே ஹீரோ என்று பிரதீப் முடிவு எடுத்தார்.

லவ் டுடே திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கூட இவரை தேடி வந்த நிலையில் அதனை இயற்கை இவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதோடு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐ கே என்ற படத்தில் நடிக்க தொடங்கினார். இந்தத் திரைப்படத்தை மாஸ்டர் மற்றும் லியோ போன்ற படங்களை தயாரித்தல் லலித்குமார் தயாரித்தார். அதேபோல அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் திரைப்படத்திலும் பிரதீப் நடித்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இருந்தாலும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பக்கமாக எல்.ஐ.கே திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் முடிந்த பாடு இல்லை.

அதோடு டியூட் என்ற படத்தில் பிரதீப் நடிக்க தொடங்கிவிட்டார். பட்ஜெட்டை விட விக்னேஷ் சிவன் அதிக செலவு செய்ததால் கடுப்பான லலித் குமார் இதற்கு மேல் என்னால் பணம் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட விக்னேஷ் சிவன் படத்தை கிடப்பில் போட்டார். அதன் பிறகு பேச்சுவார்த்தை நடந்து படபிடிப்பு மீண்டும் தொடங்கியது. இந்த படம் தொடங்கிய போது சொல்லப்பட்ட பட்ஜெட் என்னவோ 65 கோடி தான். அதன் பிறகு 70 கோடியானது. இந்தப் படத்தை வருகின்ற செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ள நிலையில் படம் தொடங்கப்பட்ட நாள் முதல் ரிலீஸ் தேதி வரை கணக்கிட்டால் இரண்டு வருடங்கள் ஆகிறது. 70 கோடிக்கான வட்டி மற்றும் வெளியீட்டு செலவு என எல்லாம் சேர்த்தால் படத்தின் மொத்த பட்ஜெட் 125 கோடியை தொடுகிறது. ஆனால் பிரதீப் ரங்க நாதனுக்கு அவ்வளவு வியாபாரம் எல்லாம் இல்லை. இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் தயாரிப்பாளர் லலித் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளாராம்.
