தமிழக அரசியல் களம் எப்போதுமே புதிய திருப்பங்களையும் விவாதங்களையும் சந்தித்து வருகின்றது. அதன்படி தற்போது வைஷ்ணவியின் கடுமையான கருத்துக்கள் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. விஜய் குறித்து அவர் வெளியிட்ட வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி விவாதத்தை கிளப்பியுள்ளது. தமிழக வெற்றி கழகம் மூலமாக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய வைஷ்ணவி தற்போது திமுகவில் இணைந்து செயல்பட்டு வருகின்றார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் நடிகர் விஜயின் அரசியல் நடைமுறைகளை திறம்பட விமர்சனம் செய்துள்ளார்.
அதில், தன்னை வென்ற ஒருவனால் மட்டுமே தரணியை வெல்ல முடியும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியதை குறிப்பிட்ட வைஷ்ணவி, பத்து நாட்களாக சாப்பிடவில்லை, தூங்கவில்லை, தண்ணீர் கூட குடிக்கவில்லை என்று கூறி மக்கள் அனுதாபம் பெறுவதற்கு விஜய் முயற்சித்து வருவதாக வைஷ்ணவி குற்றம் சாட்டியுள்ளார். அதேசமயம் தலைவராக இருக்க வேண்டிய உறுதி, நிலைப்பாடு மற்றும் தொண்டர்களை வழிநடத்தும் திறன் விஜய் இடம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு உண்மையான தலைவன் தன்னை ஒரு நிலைப்பாட்டில் வைத்துக்கொண்டு தொண்டர்களையும் எதிர்கால தலைவர்களையும் வழிநடத்துவார். இங்கு தலைமைக்கே தகுதி இல்லை, முதல்வராக வேண்டுமென்ற ஆசை மட்டுமே நிறைய இருக்கிறது என்று வைஷ்ணவி கடுமையாக விமர்சித்துள்ளார். அவருடைய இந்த கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…