கேபிஒய் பாலா நடக்க முடியாத ஒரு பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்ய பணம் கொடுத்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலமாகவும் மிகப் பிரபலமான காமெடி நடிகராக வளம் வந்தவர் கே பி ஒய் பாலா. இந்த நிகழ்ச்சி மூலமாக தனது திறமையை வெளிக் கொண்டு வந்த இவர் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமையை காட்டினார். அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு அனைவரையும் சிரிக்க வைத்தார்.
அது மட்டுமில்லாமல் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகின்றார். சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தனக்கு கிடைக்கும் பணத்தை வைத்து பலருக்கும் உதவி செய்து வருகின்றார். கோடி கோடியாய் சம்பாதிக்கும் நடிகர்கள் கூட பிறருக்கு உதவி செய்வதற்கு தயங்கி வரும் நிலையில் சிறிய அளவு தொகையை சம்பாதித்தாலும் அதனை மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்து வருகின்றார் கே பி ஒய் பாலா.
நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து மாற்றம் என்ற அறக்கட்டளை மூலமாக பல ஏழை, எளிய குழந்தைகள், உடல் ஊனமுற்றோர் என அனைவருக்கும் உதவி செய்து வருகின்றார். சமீபத்தில் கணவனை இழந்த பெண்மணிக்கு ஆட்டோ வாங்கி கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து வீடு இல்லாத ஒருவருக்கு வீடு கட்டி கொடுத்து அதனை ராகவா லாரன்ஸ் கையால் திறக்க வைத்தார்.
இவரின் வீடியோக்கள் இணையதள பக்கங்களில் படுவைரலாகி வருகின்றது. தனது உதவி செய்யும் குணத்தால் மிகப்பெரிய புகழை எட்டி இருக்கின்றார் கே பி ஒய் பாலா. அந்த வகையில் தற்போது நடக்க முடியாத ஒரு பெண்ணிற்கு அவர் உதவி செய்திருக்கின்றார். ஒரு வருடத்திற்கு முன்பு அந்த பெண்ணால் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
அப்போது அறுவை சிகிச்சை செய்தால் அவர் நடக்கலாம் என்று கூறியிருந்தார். தற்போது அவர் அறுவை சிகிச்சை செய்து நன்றாக நடந்து வருகின்றார் .மேலும் பிசியோதெரபி செய்ய வேண்டும் என்பதற்காக 45 ஆயிரம் ரூபாய் பணத்தை பாலா அவர்களுக்கு தற்போது கொடுத்திருக்கின்றார். இந்த வீடியோவானது தற்போதைய இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram