தண்ணீர் பாட்டிலோடு பால்கனிக்கு வந்த வாலிபர்… நொடி பொழுதில் நிலை தடுமாறி நடந்த சம்பவம்… பகீர் கிளப்பும் வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 15, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் வெளியாக கூடிய வீடியோக்களில் சில நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. அப்படிதான் தற்போது ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில் நபர் ஒருவர் தன் கையில் தண்ணீர் பாட்டிலுடன் பால்கனிக்கு வருகின்றார். பிறகு அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த துணிகளை பார்த்தவாறு தடுப்புச் சுவரை நோக்கி நகரும் நிலையில் திடீரென்று அவர் தடுமாறி எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விடுகின்றார். இந்த காட்சி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்து பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக பால்கனிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவாதம் சமூக வலைத்தளத்தில் அதிகரித்துள்ளது. சிறிய தவறுகள் கூட பெரிய விபத்துகளாக மாறிவிடும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. மேலும் சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த வீடியோ எச்சரிக்கை மணி அடிப்பது போல உள்ளது. குடும்பத்தின் பாதுகாப்பு அனைவருக்கும் முதன்மை என்பதையும் அவ்வாறு கவனிப்பதே இத்தகைய விபத்துக்களை தவிர்க்கும் ஒரே வழி என்பதையும் இந்த வீடியோ வலியுறுத்தும் நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

FAISAL AGWAN பதிவைப் பகிர்ந்துள்ளார் (@faisal_agwan786)