இந்திய இரயில்வே தனது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. பொதுவாக ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் மந்தமான வெள்ளை நிறப் போர்வை மற்றும் விரிப்புகளுக்குப் பதிலாக, இனி கண்கவர் வண்ணமயமான மற்றும் நவீன டிசைன்கள் கொண்ட விரிப்புகள் வழங்கப்பட உள்ளன. பழைய வெள்ளை விரிப்புகள் ரயில் பெட்டிகளை ஒரு பிணவறை போன்ற உணர்வைத் தருவதாக பயணிகள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்த நிலையில், இந்த வண்ணமயமான மாற்றம் ரயில் பயணத்தை மிகவும் புத்துணர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோக்களில் வந்தே பாரத் ரயிலின் இந்த புதிய தோற்றம் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விரிப்புகள் மட்டுமன்றி, ரயிலில் உணவு பரிமாறும் ஊழியர்கள் கையுறைகள், முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணிந்து மிகுந்த சுகாதாரத்துடன் பணியாற்றுவதும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அதே சமயம், ரயில்வே சொத்துக்களான இந்த விரிப்புகள் மற்றும் தலையணைகளை பயணிகள் திருடிச் செல்லக்கூடாது என்றும், இவை ஊழியர்களின் பொறுப்பு என்பதால் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
View this post on Instagram
