#image_title
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ளார். ஏற்கனவே ஞானவேல் இயக்கத்தில் உருவான ஜெய் பீம் படம் சூப்பர் ஹிட் ஆனது.
இந்த முறை ஞானவேல் இயக்கும் திரைப்படத்தில் ரஜினி, அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் ரஜினியின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. வேட்டையன் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.
இந்த நிலையில் 19-ஆம் தேதி நாளை காலை 10 மணிக்கு வேட்டையன் படத்தின் அப்டேட் வெளியாகும் என லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. ஒருவேளை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்க வாய்ப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.
கங்குவா திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் யுவி கிரியேஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. கங்குவார் திரைப்படம் மாபெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. சூர்யா படம் ரிலீஸ் ஆகும் அன்று ரஜினியின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதால் இருதரப்பு ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…