தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் தான் நடிகர் எம் ஜி ஆர். நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல தடைகளை கடந்து நாயகனாக மாறியவர். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தார். யார் தயாரிப்பாளராக இருந்தாலும் இந்த படம் தொடர்பான முடிவை தானே எடுக்கும் வல்லமையுடன் வளம் வந்தவர் எம்ஜிஆர். அதுமட்டுமல்லாமல் பல நடிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்துள்ளார். படபிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சமமான உணவு வழங்க வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வந்தவர் எம்ஜிஆர் தான்.
இப்படி சினிமாவில் மட்டுமல்லாமல் பொது வாழ்க்கையிலும் ஊரே போற்றும் நல்லவராக வாழ்ந்தவர்தான் எம்ஜிஆர். இப்படிப்பட்ட எம்ஜிஆர் சினிமாவில் பிஸியாக இருந்த காலத்தில் நடிகர் சோவிடம் ஒரு கேள்வியை கேட்டுள்ளார். ஒரு நாள் எம்ஜிஆர் உடன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பு இடைவெளியில் சோ, ஒளிவிளக்கு உங்களுக்கு நூறாவது படம். படம் நன்றாக ஓடியுள்ளது படத்திற்கு வெற்றி விழா எடுக்கவில்லையா என்று எம்ஜிஆரிடம் கேட்டுள்ளார். உடனே அவர் அண்ணா உடல் நலம் முடியாமல் உள்ளார் இப்படியான நேரத்தில் விழா நடத்த எனக்கு விருப்பமில்லை என்று கூறிவிட்டார்.
உடனே அடுத்த நாள் ஷோ ஒரு வாழ்த்து மடலை தயார் செய்து எம்ஜிஆரிடம் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அந்த காலத்தில் எல்லாம் யாராவது வாழ்த்து மடல் கொடுத்தால் அதனை பிரேம் போட்டு வீட்டில் மாட்டி விடுவார்கள். அந்த வாழ்த்து மடலை பார்த்த எம்ஜிஆர் முன்னும் பின்னும் ஆக திருப்பி பார்த்துள்ளார். இதனைப் பார்த்த சோ ஏதாவது எழுத்துப் பிழை உள்ளதா என்று கேட்டுள்ளார். உடனே எம்ஜிஆர் இப்படி இரண்டு பக்கமும் எழுதிக் கொடுத்தால் எப்படி பிரேம் போட்டு மாற்றுவது என்று சிரித்துக் கொண்டே கேட்டுள்ளார். இதனைக் கேட்டு சோ மட்டுமல்லாமல் அங்கிருந்து அனைவருமே சரித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான…
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…