தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இவர் ஒரு ஜோதிடர் என்பது பலருக்கும் தெரியாது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியதாவது, சைதாப்பேட்டையில் இருக்கிற ஜோதிடர்கிட்ட தான் நான் ஜோதிடம் கற்றுக்கொண்டேன். அவர்தான் நான் சினிமாக்கு வருவேன் என்று 1964லேயே எழுதிக் கொடுத்தார்.
ஆரம்பத்துல சினிமாக்காரர்களுக்கு மட்டும்தான் ஜோசியம் பார்த்தேன். அப்புறம் நாளாக நாளாக வெளி ஆட்கள் எல்லாம் தொந்தரவு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. சரின்னு சொல்லி ஒரு மணி நேரத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் என்று சொன்னேன். அப்போது தான் வரமாட்டார்கள் என்று அப்படி சொன்னேன். ஆனால் கூட்டம் குறையவில்லை.
ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும்போது எனக்கு ஒரு நாள் போன் பண்ணி நீங்க நல்லா ஜோசியம் பாப்பீங்களாமே என்று என்னை வீட்டுக்கு கூப்பிட்டாங்க. அதே சமயத்துல இன்னொரு ஜோசியரும் அங்கு வந்திருந்தார். எங்க ரெண்டு பேர்கிட்டயும், யாரு அடுத்த முதலமைச்சர் என்று ஜெயலலிதா கேட்டார். அதுக்கு அந்த ஜோசியர் நீங்கதான் என்று சொன்னார். ஆனால் நான், நீங்க முதல்வர் ஆக மாட்டீங்க. இதுக்கு அடுத்த முறைதான் ஆவீங்கன்னு சொன்னேன். நான் சொன்ன அதே மாதிரி தான் நடந்துச்சு என்று நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி அதில் கூறியிருக்கிறார்.
