அதிமுகவில் திடீர் திருப்பம்: EPS-உடன் தூதுவிடும் SP வேலுமணி..! இரு தரப்பும் போட்ட அதிரடி கண்டிஷன்கள்—ஒன்றுசேருமா கட்சி..?

By Soundarya on வைகாசி 25, 2026

Spread the love

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களுக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி (EPS) உடன் மீண்டும் இணைய எஸ்பி வேலுமணி (SP வேலுமணி) தரப்பு முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக இரு தரப்பிலும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதிமுக விவகாரம் குறித்து ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள புகாரை எஸ்பி வேலுமணி தரப்பு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இபிஎஸ் தரப்பில் முக்கிய நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலடியாக, தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகாரைத் திரும்பப் பெற வேண்டும் என்றால், தங்களின் ஆதரவாளர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட கட்சிப் பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும் என்று அதிருப்தி தரப்பினர் (வேலுமணி தரப்பு) பிடிவாதமாக டிமாண்ட் செய்து வருகின்றனர். இந்தத் தகவல், இரு தரப்பின் நிபந்தனைகளும் நிறைவேறுமா மற்றும் அதிமுக மீண்டும் ஒன்றிணையுமா என்ற பெரும் எதிர்பார்ப்பை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.