2029 பிரதமர் வேட்பாளர் ராகுலா? விஜய்யா?…. மௌனம் கலைத்த திருமாவளவன்… செப்டம்பர் 9-ல் மிகப்பெரிய அரசியல் சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 5, 2026

Spread the love

தவெக தலைமையில் கூட்டணி அமைப்பது மற்றும் எதிர்வரும் அரசியல் நகர்வுகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். வரவிருக்கும் 2029 மக்களவைத் தேர்தலின் பிரதமர் வேட்பாளர் விவகாரம் மற்றும் தமிழக அரசியல் கூட்டணிகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் விரிவாகப் பதிலளித்தார்.

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள தோழமைக் கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பை தவெக அமைச்சர்களான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண்ராஜ் ஆகியோர் சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்திற்கு நேரில் சென்று திருமாவளவனிடம் வழங்கினர்.

   

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், செப்டம்பர் 9 அன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முறைப்படி பங்கேற்கும் என்பதை உறுதிப்படுத்தினார். மேலும், இக்கூட்டத்தில் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) உள்ளிட்ட அனைத்து தோழமைக் கட்சிகளும் கலந்துகொள்ள உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தவெக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்பது குறித்து அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

   

அண்மைக்காலமாக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ள 2029-ஆம் ஆண்டின் பிரதமர் வேட்பாளர் விவகாரம், ராகுல் காந்தியின் தலைமை மற்றும் விஜய்யின் பிரதமர் கனவு ஆகியவை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த திருமாவளவன், பிரதமர் வேட்பாளர் தொடர்பான நிலப்பாடு குறித்து இப்போது எதுவும் கூற முடியாது என்றும், செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்திற்குப் பிறகே அதுகுறித்து விரிவாகப் பேச முடியும் என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.