#image_title
பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜி வி பிரகாஷும், சைந்தவியும் பள்ளிக் காலம் முதலே நண்பர்கள். ஜி வி இசையமைப்பாளராக ஆனதும் சைந்தவிக்கு அதிக பாடல்களைக் கொடுத்தார்.
அதிலிருந்து வெளிவந்து இப்போது இருவருமே தங்கள் தனிவாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் கவனம் செலுத்துகின்றனர். ஜி வி பிரகாஷ் தன்னுடைய 17 ஆவது வயதிலேயே வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்ற சில பாடல்களை எப்படி அவர் அவ்வளவு சின்ன வயதில் இசையமைத்திருப்பார் என ஆச்சர்யப்பட்டனர்.
அந்த படத்தில் இடம்பெற்ற ‘உருகுதே மருகுதே’, ‘வெயிலோடு உறவாடி’ போன்ற பாடல்கள் அந்த படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. இந்த படத்தின் வெற்றியாலும் பாடல்கள் பெற்ற கவனத்தாலும் ஒரே படத்தில் முன்னணி இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார். ஆனால் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் வசந்த பாலனின் அடுத்த படமான அங்காடித் தெரு படத்துக்காக அவர் ஜிவியை அணுகிய போது பாடல்கள் தராமல் இழுத்தடித்துள்ளார்.
இதுபற்றி ஒருநேர்காணலில் பகிர்ந்துள்ள வசந்தபாலன், “வெயில் படத்தின் வெற்றி ஜி வி யை ஒரே நாளில் முன்னணி இசையமைப்பாளராக்கிவிட்டது. அடுத்தடுத்து அஜித்தின் கிரீடம், ரஜினியின் குசேலன், ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களில் பிஸியாகிவிட்டார். நான் அவரை பார்க்க சென்றால் அவருக்காக முன்னணி இயக்குனர்கள் அங்கே காத்திருப்பார்கள்.
என்னால் அவரிடம் ஒரு சூழலை சொல்லி பாட்டு வாங்க முடியவில்லை. ஒருகட்டத்தில் நாங்கள் சுமூகமாகப் பேசி பிரிந்துவிட்டோம். அதன் பின்னர் அந்த படத்தின் சில பாடல்களை விஜய் ஆண்டனி இசையமைத்தார்.” எனப் பகிர்ந்துள்ளார்.
இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு சரியாகி அதன் பின்னர் இருவரும் ஜெயில் என்ற படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். அந்த படம் பெரியளவில் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…
2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம்…
106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…
பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…
நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…
எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி…