தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் ஒன்றிணைந்து திமுகவிற்கு தங்களது முழு ஆதரவை வெளிப்படுத்தியிருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட மசோதாவிற்கு (FCRA) எதிராக திமுக எடுத்த உறுதியான நிலைப்பாட்டிற்காக, அந்த அமைப்புகளின் ஆயர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துத் தங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த அதிரடித் திருப்பம், சிறுபான்மையின மக்களின் வாக்குகளைப் பெரிதும் நம்பியிருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பலத்த பின்னடைவாகவும், அதிர்ச்சியாகவும் அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் திமுக தனது வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்தியுள்ள நிலையில், விஜய்யின் கணக்குகள் தடம் புரண்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
