திமுகவும் அதிமுகவும் ஒன்னா சேரணும்.. திருமாவளவன் CM ஆகணும்… வன்னி அரசு வைத்த பகீர் அரசியல் ட்விஸ்ட்..!!

By Soundarya on வைகாசி 19, 2026

Spread the love

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது என்றே தான் நினைத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) சட்டமன்றக் குழுத் தலைவரும் திண்டிவனம் எம்.எல்.ஏ-வுமான வன்னி அரசு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் தடாலடியாகத் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் களம் தவெக-வின் புதிய எழுச்சியால் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், புதிய தலைமுறை ஊடகத்தின் ‘ஸ்டாரும் சோறும்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இந்த விவாதத்தை வெளிப்படையாக முன்வைத்துள்ளார். தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, இரு திராவிடக் கட்சிகளும் ஒன்றிணைவது ஆரோக்கியமான நகர்வாக இருக்கும் என்பது அவரது தனிப்பட்ட பார்வையாகப் பார்க்கப்படுகிறது.

மேலும், விசிக தலைவர் தொல். திருமாவளவனைத் தமிழகத்தின் முதலமைச்சராக்க வேண்டும் என்று முன்னெடுக்கப்படும் அரசியல் நகர்வுகள் மற்றும் கருத்துக்கள் மிகவும் வரவேற்கத்தக்க ஒரு நல்ல விஷயம் என்றும் அவர் அந்த நேர்காணலில் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார். தமிழகத்தின் தற்போதைய அரசியல் நகர்வுகள் மற்றும் சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்புச் சூழல்களுக்கு மத்தியில் வன்னி அரசு வெளியிட்டுள்ள இந்த அதிரடிக் கருத்துக்கள், கூட்டணி மற்றும் எதிர்கால அரசியல் கூட்டுத் திட்டங்கள் குறித்த புதிய விவாதங்களை அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.