தமிழ்நாடு ஆளுநர் மாளிகையான லோக்பவனில் வைகாசி அனுஷத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒரு நிகழ்வில் திருவள்ளுவர் புகைப்படத்திற்கு நெற்றியில் பட்டை மற்றும் காவி உடை அணிவிக்கப்பட்ட விவகாரம், தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் சர்ச்சையையும் கடும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. பொதுவாக வெண்ணிற ஆடையில் மத அடையாளங்கள் இன்றி சித்தரிக்கப்படும் திருவள்ளுவரை, காவி உடையில் காட்டியது தமிழ் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல் எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர் .
இந்த விவகாரம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முக்கிய நிர்வாகியும், சமூக நீதித்துறை அமைச்சருமான வன்னி அரசு தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில், பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் திருவள்ளுவரை களங்கப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் என்றும், தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்கள் ஒருபோதும் காவிகளையும், சனாதனக் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளாமல் புறந்தள்ளுவார்கள் என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளே இதற்கு மிகச்சிறந்த சாட்சியாக விளங்குகின்றன என்றும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…