சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘வானத்தைப்போல’. இந்த சீரியல் 2020ல் சன் டிவியில் தொடங்கப்பட்டது. அண்ணன் -தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கதை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
அண்ணன் சின்ராசுவின் மீது பாசமாக இருக்கும் தங்கையாக துளசி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை ஸ்வேதா. ஆனால் இவர் பாதியிலேயே இந்த சீரியலை விட்டு விலகினார். இதை தொடர்ந்து பல நடிகர்கள் தற்பொழுது வரை வானத்தைப்போல சீரியலை விட்டு விலகி உள்ளனர்.
வானத்தைப்போல சீரியல் இருந்து விலகிய நடிகை ஸ்வேதா தற்பொழுது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கண்ணெதிரே தோன்றினாள்’ என்ற புது தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. மணமகன் யார் தெரியுமா உங்களுக்கு? கர்நாடகாவை சேர்ந்த மது ஷங்கர் கௌடா என்பவரை தான் நடிகை ஸ்வேதா திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
தற்பொழுது இவர்களின் நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமான முறையில் நடந்துள்ளது. இதில் கண்ணெதிரே தோன்றினாள் மற்றும் வானத்தைப்போல சீரியல் நடிகர்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
தற்பொழுது இவர்களின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…