Categories: TRENDING

MGR-க்கு பாடல் எழுதவில்லை என்ற கவலை தீர்ந்தது.. ஆனாலும் அதில் ஒரு குறை.. வைரமுத்துவின் வைரல் பதிவு..

தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக வலம் வரும் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவு மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் கடந்த 44 ஆண்டுகளாக மிகச்சிறந்த பாடல் ஆசிரியராக எழுத்தாளராக வலம் வருபவர் கவிப்பேரரசு வைரமுத்து. 70 வயது தாண்டிய போதிலும் தற்போது வரை தனது சிறப்பான பாடல்களால் சிறந்த பாடல் ஆசிரியராக வலம் வருகிறார்.

சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு ‘நிழல்கள்’ என்கின்ற திரைப்படத்தில் இது ஒரு பொன்மாலைப் பொழுது என்கின்ற பாடலை எழுதி தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அரை நூற்றாண்டு பயணத்தில் மிகச்சிறந்த பாடல் ஆசிரியராக பலம் வந்த இவர் 1985 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த முதல் மரியாதை திரைப்படத்தில் அவர் எழுதிய பாடலுக்காக தேசிய விருது வாங்கினார்.

ஏழு தேசிய விருதுகள், தமிழ்நாடு அரசு வழங்கும் ஆறு மாநில விருதுகள் என 25க்கும் மேற்பட்ட புத்தகங்கள், கவி தொகுப்பு என மிகப் பெரிய பாராட்டுக்கு உரிய மனிதர் வைரமுத்து. இவர் தமிழில் தற்போது முன்னணி நடிகர்களாக விளங்கும் சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு பாடல்களை எழுதி இருக்கின்றார். ஆனால் மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு பாடல்களை எழுதியதில்லை.

அந்தக் குறையை தற்போது இருக்கும் தொழில்நுட்பம் தீர்த்து விட்டதாக ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது “எங்கிருந்தோ எனக்கு ஒரு பாடல் வந்தது. வியந்தும் மகிழ்ந்தும் போனேன். அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் எம்ஜிஆர் பானுமதியும் நடித்த புகழ் பெற்ற பாடல் காட்சியோடு நான் எழுதிய பாடல் ஒன்றை பொருத்திருந்தார்கள்.

எம்ஜிஆருக்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தொழில்நுட்பத்தால் தீர்ந்தது. ஆனால் வேறு ஒரு குறை வந்தது. இதை கண்டு களிப்பதற்கு எம்ஜிஆர் பானுமதியும் இல்லையே” என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவுடன் சேர்த்து வைரமுத்து வெளியிட்டு இருந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

3 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

4 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

4 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

18 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

18 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

19 மணி நேரங்கள் ago