வார்த்தைய மாற்ற சொன்ன இளையராஜாவிடம் கோபப்பட்ட வைரமுத்து… ஆனா ரஹ்மான் சொன்னப்ப மட்டும் சம்மதம்… ஏன் தெரியுமா?

By vinoth on ஆனி 15, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால் அதற்கான வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இல்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அவர்கள் இணைந்து பணியாற்றியது வெறும் ஆறே ஆண்டுகள்தான் என்ற போதும் அவர்கள் உருவாக்கிய பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தால் அழியாதவை.

1980 ஆம் ஆண்டு இருவரும் நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலின் மூலம் இணைந்தார்கள். அதன் பிறகு இருவருக்கும் இடையிலான நட்பு அதிகமாகி அடுத்தடுத்த ஆண்டுகளில் இளையராஜா இசையில் அதிக பாடல்கள் எழுதியவராக இருந்தார். ஆனால் இந்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது.

   

அதற்குக் காரணம் வைரமுத்துவின் பாடல்களில் வார்த்தைகளை இளையராஜா மாற்ற சொன்னதுதான் என்று சொல்லப்படுகிறது. ஒரு பாடலில் மெட்டுக்குப் பொருந்தாத வரிகளை வைரமுத்து வருவதற்கு முன்பாக இளையராஜாவே மாற்றியதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாக சொல்லப்படுகிறது.

   

#image_title

 

இப்படி தன் வரிகளுக்காக இளையராஜாவிடம் சண்டை போட்டு பிரிந்த வைரமுத்து சில ஆண்டுகளுக்குப் பிறகு ஏ ஆர் ரஹ்மான் வந்த பிறகுதான் மீண்டும் புகழ் வெளிச்சத்துக்கு வந்தார். அவர் ரஹ்மானுடன் ஆரம்ப காலங்களில் பணியாற்றிய ரோஜா மற்றும் கிழக்குச் சீமையிலே ஆகிய படங்களின் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன.

அப்படிப்பட்ட ஒரு பாடல்தான் ‘கத்தாழங் காட்டுவழி பாடல். அந்த பாடலுக்கு முதலில் வைரமுத்து எழுதிய வரிகள் அவையில்லையாம் “வலது கண்ண விட்டு பிரிஞ்சு போற இடது கண்ணே… என ஆரம்பித்து நீ குருண போட்டு வளத்த கோழி கூட அழுகுதும்மா’ என எழுதியுள்ளார். இந்த வரிகளோடு பாடல் ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட பின்னர் அவற்றுக்கு  வரிகள் பொருந்தவில்லை எனக் கூறியுள்ளார் ரஹ்மான்.

அந்த கருத்தை ஒத்துக் கொண்ட வைரமுத்து அதன் பின்னர் எழுதிய வரிகள்தான் “கத்தாழங் காட்டு வழி… கள்ளிப்பட்டி ரோட்டு வழி” என்ற வரிகள். இந்த தகவலை அப்போது வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்த நடிகர் மாரிமுத்து ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.