திடீர் ஷாக்..! தன்மானத்தை இழந்து தான் திமுக கூட்டணியில் இருந்தோம்… வைகோ பகீர் குற்றசாட்டு..!!

By Soundarya on ஆனி 25, 2026

Spread the love

திமுக கூட்டணியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வைத்துள்ள இந்த திடீர் விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னைப்போல் திமுகவை உயர்த்தி பிடித்தவர்கள் யாரும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், தன்மானத்தை இழந்துதான் இதுவரை இக்கூட்டணியில் பயணித்தோம் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், தேர்தல் தொகுதி பங்கீட்டில் திமுக தங்களை முறையாக நடத்தவில்லை என்ற அதிருப்தியையும் அவர் பகிரங்கமாக உடைத்துள்ளார்.

காணாமல் போகும் நிலையிலிருந்த தேமுதிகவிற்கு 10 இடங்களும், கிளைகளே இல்லாத விசிகவிற்கு 8 இடங்களும் திமுக வழங்கியுள்ளதாக வைகோ நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். தங்களை விட மற்ற கட்சிகளுக்கு திமுக கூடுதல் முக்கியத்துவம் அளித்ததே அவரது இந்த கோபத்திற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இந்த அநீதி மற்றும் புறக்கணிப்பு காரணமாகவே, வைகோ திமுக மீது இத்தகைய கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்