தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணியை வளமாக வைத்துக் கொண்டு இந்த முறை மீண்டும் ஆட்சியை தக்க வைத்து விடலாம் என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. ஆனால் கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. அவர்களிடம் ஸ்டாலின் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார். ஆனால் கூடுதல் தொகுதிகளை கேட்கும் கட்சிகள் கூட்டணியில் இருந்து விலக உள்ளதாக இணையத்தில் செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறது.
இதனிடையே கூட்டணிக்கு பங்கம் விளைவிக்கும் எந்த கருத்தையும் கூற மாட்டோம் என்று வைகோ கூறியுள்ளார். காங்கிரஸ் உள்கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று எம்.பி மாணிக்கம் தாகூர் பேசியதற்கு பதில் அளித்த அவர், லட்சுமண ரேகையை தாண்டும் பழக்கம் மதிமுகவுக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணி கட்சிகளை புண்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், கூகுள் பே மற்றும் போன் பே போன்ற செயலிகளைப்…
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக, தமிழ்நாடு அரசு 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' குறித்த அதிகாரப்பூர்வ…
தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் தமக்கு இல்லை எனவும், டிடிவி தினகரனின் தலைமையிலேயே தொடர்ந்து பயணிக்கப் போவதாகவும் மன்னார்குடி…
தமிழக அரசியலில் அதிகாரப் பகிர்வு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆங்கில ஊடகம்…
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-Kisan) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய்…
இளம் வயதிலேயே ஏற்படும் கை நடுக்கம் பலருக்கும் கவலையை ஏற்படுத்தினாலும், இது பெரும்பாலும் நமது வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும்…