BREAKING: “மரணத்தை விட கொடியது”…. அதிமுகவில் இருந்து வைகைச் செல்வன் விலகல்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

By Nanthini on ஆடி 3, 2026

Spread the love

அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது விலகல் குறித்துப் பேசிய அவர், கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “கட்சியும், தொண்டர்களும் அழிந்தால் கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர் ஒரு நல்ல தலைவராக இருக்க முடியாது” என்று சாடியுள்ள வைகைச் செல்வன், கட்சியில் தனக்குத் தொடர்ச்சியாக நேர்ந்த அவமதிப்புகளைக் குறிப்பிடும் வகையில் “மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு என்பதை நான் முழுமையாகப் புரிந்து கொண்டேன்” என மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் அதிருப்திகளும் அதிகரித்து வரும் நிலையில், கட்சியின் முக்கியப் பேச்சாளராகவும் கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருந்த ஒரு மூத்த தலைவர் இப்படிப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி வெளியேறியிருப்பது அக்கட்சிக்குக் கூடுதல் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.