BREAKING: 18 பந்துகளில் அரைசதம் விளாசி அதிரடி… சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி…!!

By Devi Ramu on ஆடி 23, 2026

Spread the love

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச போட்டிகளில் தனது அறிமுக அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் அபாரமாக ஆடிய அவர், வெறும் 18 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகளை விளாசி இந்த அதிவேக அரைசதத்தை எட்டினார்.

முன்னதாக இங்கிலாந்து தொடரில் எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாக விளையாட முடியாமல் ஏமாற்றமளித்த சூழலில், தற்போது ஜிம்பாப்வே தொடரில் அவர் காட்டிய அதிரடி ஆட்டம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இவரது இந்த அதிரடி பேட்டிங் திறமை கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.