#image_title
நகைச்சுவை வடிவேலுவை பற்றிய விஷயங்கள் தான் தற்போது சமூக வலைதளத்திலும், கோலிவுட் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நபரில் ஒருவராக இருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் இவர் இல்லாத படங்களே இல்லை என்ற அளவுக்கு கொடிகட்டி பறந்தவர் நடிகர் வடிவேலு. ஆனால் அந்த காலகட்டத்தில் இருந்த மவுசு தற்போது குறைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவருடன் நடித்த பலரும் அவரை பற்றின பல எதிர்மறையான கருத்துகளை கூறி வந்த நிலையில், விஜயகாந்த் மறைவிற்கு அவர் செல்லாதது மேலும் அவர் மீதான நன் மதிப்பை கெடுத்துள்ளது.
#image_title
ஒட்டு மொத்த திரையுலகமே விஜயகாந்த் இறப்பிற்கு சென்ற நிலையில், வெளிநாட்டில் இருந்த நடிகர்கள் சென்னை திரும்பிய பிறகு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி அவரது மனைவி மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஆனால் அவரால் சினிமாவில் வளர்த்து விடப்பட்ட வடிவேலு ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை என்பதால், அவர் மீது பலரும் தங்களது வருத்தங்களையும், கோபத்தையும் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுமே சேர்ந்து கொண்டாடியது. ஆனால் ரஜினி, கமல் இவர்களைத் தவிர சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நடிகர்கள், நடிகைகள் யாரும் வராதது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
#image_title
இந்நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார். இவ்விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றி கிளம்பியதை தொடர்ந்து ரஜினி, கமல் ஆகியோரும் உரையாற்றி விட்டு ஒருவர் பின் ஒருவராக கிளம்பினர். அதன் பிறகு வடிவேலு மேடையில் பேசிவிட்டு கிளம்ப அவருக்காக பேட்டரி கார் தயார் நிலையில் இருந்ததாம். ஆனால் அவர் வருவதற்கு முன் டிரம்ஸ் சிவமணி தன் குடும்பத்தாருடன் அந்த பேட்டரி காரில் ஏறி உட்கார அங்கு இருந்தவர்கள் இது வடிவேலுவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கார் என்று சொல்லியிருக்கிறார்கள்.
#image_title
அதற்கு டிரம்ஸ் சிவமணி ஆமா, அவன்லாம் ஒரு ஆளு எனக் கூறியதோடு காத்திருந்து வரட்டும் எனக் கூறியதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். வடிவேலுவுடன் வந்திருந்தவர்கள் டிரம்ஸ் சிவமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்ததாக ஒரு கார் வர, அதில் வடிவேலு அமர, பார்த்திபனும் அதில் அமர, அடுத்தக் காரில் வருமாறு வடிவேலுவை நிர்பந்திக்க, பின் வந்த காரில் ஏறி சென்றாராம் வடிவேலு. இது வடிவேலுவுக்கு தேவை தான் என விஜயகாந்தின் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…