தமிழ் சினிமாவில் 50 களில் தொடங்கி இன்றுவரை நடிகர் நடிகைகளாக பலரும் ஜொலித்துக் கொண்டு இருக்கின்றனர். அதனைப் போலவே தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் என ஏராளமானோர் பயணிக்கின்றனர். அதில் ஒரு சிலருக்கு மட்டுமே சினிமா பின்னணி இருக்கும். பல தங்களுடைய கடின உழைப்பால் தான் இன்று சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. அதே சமயம் திரை பிரபலங்கள் பலருக்கு சில ஒற்றுமைகள் இருக்கலாம். அதன்படி கவிஞர் வாலி, மனோரமா மற்றும் நாகேஷ் ஆகிய மூவருக்கும் ஒரே ஒற்றுமை உள்ளது. இதனை வாலி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
கவிஞர் வாலி:
அதாவது தமிழ் திரையுலகில் நான்கு தலைமுறைகளுக்கு பாட்டு எழுதியவர் தான் கவிஞர் வாலி. இவர் பாட்டு எழுதியதோடு சிறுகதை, கதை மற்றும் நடிப்பு என பல்துறை வித்தவராகத்தான் திகழ்ந்தார். இவர் திரைத்துறையில் சுமார் 15,000 பாடல்களை எழுதியுள்ளார். சுமார் 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இப்படி சினிமாவில் உச்சத்தில் இருந்த பாலி திரைத்துறையில் முதன்முதலாக அறிமுகமானது 1958 ஆம் ஆண்டு என அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
மனோரமா:
அதனைப் போலவே தமிழ் சினிமாவில் சிறப்புமிக்க பழம்பெரும் நடிகையாக இருந்தவர்தான் மனோரமா. தமிழ் திரையுலகில் தமிழ் திரைப்பட ரசிகர்களால் நடிகை மனோரமா அவர்கள் ஆட்சி என்று அன்போடு அழைக்கப்பட்டார். நகைச்சுவை கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்தி இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இப்படி ரசிகர்களால் ஆட்சி என்று அன்போடு கொண்டாடப்பட்ட மனோரமா திரைத்துறையில் 1958 ஆம் ஆண்டு தான் கதாநாயகியாக அறிமுகமானார்.
நாகேஷ்:
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகர் நாகேஷ். அவருடைய அலட்டிக் கொள்ளாத முக பாவங்களும் ஆபாசம் இல்லாத காமெடி வரிகளும் உடல் அசைவுகளும் அவரை ரசிகர்கள் மத்தியில் இன்றும் நிலைத்து நிற்க வைத்துள்ளது. இவர் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், துணை நடிகர் மற்றும் வில்லனாகவும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படி சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நாகேஷ் திரைத் துறையில் அறிமுகமானது 1958 ஆம் ஆண்டு தான்.
இந்த தகவலை தான் கவிஞர் வாலி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதாவது நானும், மனோரமா மற்றும் நாகேஷ் மூவரும் திரை துறையில் அறிமுகமானது 1958 ஆம் ஆண்டு தான். அந்த வருடத்தில் ஏதோ ஒன்று உள்ளது என்று ஒரு பேட்டியில் கூறி இருப்பார்.
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த 3 மாதங்களுக்குள் புதிதாக 2,000 மின்சார ஏசி பஸ்களை…
சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் போல பர்தா அணிந்து வந்து, ஊழியர்களின்…
தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி…
ஈரோடு மாவட்டம், சக்தி சாலை செங்குந்தர் நகர் 6-வது வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய கண்ணன் என்பவர், அங்குள்ள காலண்டர்…
ஹரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த 21 வயது இளைஞரான மோனு, கடந்த ஜூன் 8-ஆம் தேதி இரவு மருந்து வாங்குவதற்காக…
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…