உலக அளவில் 25 சதவீத வர்த்தகமும், 35 சதவீத எண்ணெய் போக்குவரத்தும் நடைபெறும் மிக முக்கிய நீர்ச்சந்தியான மலாக்கா நீரிணையை (Strait of Malacca) அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் திட்டமிட்டு வருவது சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவுடன் மேற்கொள்ளப்பட்ட புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம், அந்த நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி கிடைத்துள்ளது. இதன்மூலம் சீனா மற்றும் ஜப்பான் நாடுகளின் 80 சதவீத எண்ணெய் விநியோகப் பாதையான மலாக்கா நீரிணையை அமெரிக்காவால் எளிதாகக் கண்காணிக்க முடியும்.
இந்த நீரிணை இந்தியாவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியாகவும் மிக முக்கியமானது. இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் சுமார் 55 சதவீதம் இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது. எரிபொருள் மட்டுமல்லாது மின்னணு சாதனங்கள், உற்பத்திப் பொருட்கள் எனப் பலவும் இதன் மூலமே பரிமாறப்படுகின்றன. இதனால் மலாக்கா நீரிணையில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும் இந்திய வர்த்தகத்தைப் பெருமளவில் பாதிக்கும் என்பதால், இந்தியா இந்தப் பகுதியைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
அமெரிக்காவின் இந்த நகர்வுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்தப் பிராந்தியத்தில் இந்தியா தனது கடல்சார் வலிமையை அதிகரித்து வருகிறது. அந்தமான் நிக்கோபாரில் உள்ள ‘ஐஎன்எஸ் பாஸ்’ விமான நிலையம் மற்றும் கிரேட் நிக்கோபார் திட்டம் ஆகியவற்றின் மூலம் மலாக்கா நீரிணையை இந்தியா தனது கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வைத்துள்ளது. எதிர்காலத்தில் சீனாவுடனான மோதல் போக்கு அதிகரித்தால், அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இந்த மலாக்கா நீரிணை ஒரு மிகச்சிறந்த வியூகப் புள்ளியாக அமையும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
உத்தரகாண்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நைனிதால் வீதிகளில், ஒரு சிறுவன் பொதுமக்களுக்கு முன்னால் அசாத்தியமான மேஜிக் வித்தைகளைக் காட்டும் வீடியோ…
பிரபல கல்வி பயிற்சியாளரான கான் சார் (Khan Sir) மற்றும் அவரது பயிற்சி மையம் குறித்த உண்மைகளை மாணவி ஒருவர்…
இந்திய அரசின் பொதுத்துறை ‘மகாரத்னா’ நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட், அந்தமான் கடற்பகுதியின் ஆழமற்ற ஆய்வு வளையத்தில் புதிதாக இயற்கை…
திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் தனிப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில், அக்கட்சியின் தலைமை…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கவர்ச்சியால் ஆட்சி அமைத்ததாகப் பேசிய திமுக தலைவரின் விமர்சனத்திற்கு, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள துளசி உத்யான் பொதுப் பூங்காவில், காவி உடை அணிந்த நபர்கள் கும்பலால் இளம்…