நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. நாட்டிலுள்ள நலிந்த விவசாயிகளுக்கு உதவுவதற்காக மத்திய மோடி அரசின் பி எம் கிஷான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 19 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் 20 ஆவது தவணை எப்போது வெளியிடப்படும் என்று நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது. ஜூனில் பணம் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியான நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், , ஜூலை 18-ம் தேதியன்று பிஹாருக்குச் செல்லும் பிரதமர் மோடி, மோதிஹரி பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது. எனவே இன்னும் 3 நாள்களே உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
