“எங்களை ஓடாதீங்கன்னு சொல்லிட்டு… நீங்க தான் ஓடுறீங்க முதலமைச்சரே”….. சட்டப்பேரவையில் விஜய்யை கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்….!

By Nanthini on புரட்டாதி 3, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தவெக அரசு மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தவெக அரசின் கடந்த 116 நாட்களில் நடைபெற்ற குற்றச் சம்பவங்களைப் பட்டியலிட்டதுடன், திமுக ஆட்சியில் பணியாற்றிய அதிகாரிகளுக்கே தற்போது முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், உறுப்பினர்களின் அனைத்து கேள்விகளுக்கும் வரும் திங்கள்கிழமை விரிவாகப் பதிலளிக்க உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தான் பதிலளிக்கும் போது எதிர்க்கட்சியினர் அவையை விட்டு வெளியேறக் கூடாது என்று கேட்டுக்கொண்டதுடன், அதை வாக்குறுதியாகத் தருமாறும் கூறிவிட்டு அவையிலிருந்து புறப்பட்டார்.

   

முதலமைச்சர் வெளியேறியதும், “வரும் திங்கள்கிழமை எங்களை ஓடக் கூடாது என்று சொல்லிவிட்டு, முதலமைச்சரே அவையை விட்டு ஓடுகிறாரே” என உதயநிதி ஸ்டாலின் கிண்டலாகக் குறிப்பிட்டார். மேலும், மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு வரும் திங்கள்கிழமை எந்தவித திசைதிருப்பலும், குட்டிக் கதைகளும் இல்லாமல் கேள்விகளுக்கு முதலமைச்சர் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

   

அதே நேரத்தில், காவல் துறையை நவீனமயமாக்க ரூ.212 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் அடுத்த 5 ஆண்டுகளில் 29,108 கூடுதல் காவல் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டிருந்தார். பணிக்காலத்தில் உயிரிழக்கும் காவலர்களுக்கான கருணைத் தொகையை ரூ.30 லட்சமாக உயர்த்துதல், புதிய வாகனங்கள் வாங்குதல் மற்றும் தடய அறிவியல் ஆய்வகங்களை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களும் இதில் அடங்கும்.