அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டப்பேரவை தொடரில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு இவ்வாறு பேசினாரா என்ற பலமான சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், உதயநிதியின் இந்த சர்ச்சையான பேச்சுக்கு அனைத்துக் கட்சியினரும் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், பெண்களுக்கு எதிரான குற்றங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இந்த அரசு ஒருபோதும் சும்மா இருக்காது என்று எச்சரித்தார். அரசியல் ரீதியாக எந்தவொரு கருத்தையும் சுதந்திரமாகத் தெரிவிக்கலாம்; ஆனால், வெறும் கவனத்தை ஈர்ப்பதற்காக மட்டும் இதுபோன்ற தகுதியற்ற பேச்சுகளில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
