தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற நிலைப்பாடோடு செயல்பட்டு வருகிறது. ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அதிமுக நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதே சமயம் மேடையில் பேசும்போதெல்லாம் அமித்ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என தொடர்ந்து கூறி வருகின்றார். இதனிடையே அதிமுக மற்றும் பாஜக இடையே ஒரு முரண்பாடு நிலவி வருகிறது.
இதனால் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் தொகுதியின் திமுக மீனவர் அணி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் பிரவீன், தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்துள்ளார். அதுவும் உதயநிதி சட்டமன்ற அலுவலகம் முன் வாகனங்களில் இருந்த திமுக கொடியை இறக்கிவிட்டு இபிஎஸ் முன்னிலையில் 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளனர். உதயநிதியின் சொந்த தொகுதியிலேயே திமுகவினர் விலகியது அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது
