சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரர் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. வழக்கமாக மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வந்து, அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அவரது வாரிசுகளைக் கௌரவித்து நலத்திட்ட உதவிகளை வழங்குவதுதான் மரபு. ஆனால், இந்த ஆண்டு விழா எவ்வித ஒருங்கிணைப்பும் இன்றி, அடுத்தடுத்து அரங்கேறிய குளறுபடிகளால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், அங்கு வந்திருந்த பொதுமக்களையும் தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அரசு அறிவிப்பின்படி காலை 10:30 மணிக்கு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் இணைந்து மரியாதை செலுத்துவதாக இருந்தது. ஆனால், அமைச்சர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முதலில் தனியாக மாலை அணிவித்தார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா ஆட்சியருடன் வந்து மரியாதை செலுத்தினார். அவர் சென்ற பிறகு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மீண்டும் ஆட்சியருடன் தனியாக வந்து மரியாதை செலுத்தினார். ஒரே அரசு விழாவில் மாவட்ட ஆட்சியர் மூன்று முறை வந்து கலந்துகொண்டதும், அமைச்சர்கள் ஈகோ பார்க்காமல் தனித்தனியாக வந்ததும் அரசு விழா என்பதையே கேள்விக்குறியாக்கியது.
இந்த நிர்வாகக் குளறுபடிகளுக்கு இடையே, விழாக்களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு (தவெக) மத்தியில் திடீரென கோஷ்டி மோதல் வெடித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அமைச்சர்களின் தாமதத்தால் மற்றவர்கள் மரியாதை செலுத்த காவல்துறையினர் தயக்கம் காட்டிய நிலையில், தவெக தொண்டர்களிடையே ஏற்பட்ட இந்த வெளிப்படையான மோதல் பரபரப்பை கூட்டியது. ஒட்டுமொத்தமாக ஒரு தியாகியின் அரசு விழா, தவெக-வின் உட்கட்சி பூசல் விழாவாக உருமாறியது அங்கிருந்தவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மற்றொருபுறம், அழகுமுத்துக்கோன் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி.யைக் காவல்துறையினர் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தினர். தவெக அமைச்சர்கள் முதலில் மரியாதை செலுத்திய பிறகே அவர் செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் கூறியதால், திமுக நிர்வாகிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சலசலப்பைத் தொடர்ந்து, “நான் நடந்தே செல்கிறேன்” என்று கூறி காரில் இருந்து இறங்கிய கனிமொழி கருணாநிதி, அங்கிருந்து நடந்தே சென்று மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சமீபத்தில் வெளியான நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தைக் காண்பதற்காக, முதல்வர் விஜய்யிடம் அமைச்சர் விக்னேஷ் 3 மணி நேரம் பணி…
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான நிதி ஆதாரங்களைக் கண்டறியும்…
அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, அமைச்சர் என். ஆனந்துக்கு எதிராக ஏற்கெனவே வழக்கு தொடர்ந்த தமிழக வெற்றிக்…
கர்நாடக மாநிலம் சுள்ளியா பகுதியில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான பாத்திமத் நிஷானா என்ற பெண் குடும்பத் தகராறு மற்றும்…
ஊழலற்ற நிர்வாகமே இலக்கு எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்து வரும் நிலையில், அவர் வசம் உள்ள…
திமுக எம்.எல்.ஏ-க்கள் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சென்று சந்திக்காதது கட்சியினரிடையே…