சங்கீதாவை வச்சு என்னை முடக்க நினைச்சாங்க.. ஆனா எதுவும் எடுப்படல… அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தவெக தலைவர் விஜய்..!!

By Soundarya on சித்திரை 8, 2026

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று (ஏப்.8) நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆவேசமாக உரையாற்றினார். தனது அரசியல் பயணத்தில் எதிர்கொண்ட முட்டுக்கட்டைகள் குறித்துப் பேசிய அவர், கரூர் விவகாரத்தைத் தொடர்ந்து ‘ஜனநாயகன்’ திரைப்படம் மற்றும் ‘SOP’ (Standard Operating Procedure) தொடர்பான விவகாரங்களில் தனக்குத் தொடர்ச்சியான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். இத்தனை ஆண்டுகள் அமைதி காத்த நிலையில், தேர்தலுக்குச் சரியாக 30 நாட்களுக்கு முன்பாகத் தன்னை முடக்கும் நோக்கில் திட்டமிட்டுச் சில தடைகள் உருவாக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக, தனது குடும்பம் மற்றும் மனைவி சங்கீதா குறித்துப் பரப்பப்பட்ட சர்ச்சைகளுக்கு மேடையிலேயே அவர் பதிலடி கொடுத்தார். தன்னைச் சுற்றியுள்ளவர்களைக் கொண்டே தன் மீது அவதூறு பரப்பப்பட்டதாகவும், ஆனால் அந்தப் பொய்ப் பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்தார். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சப்போவதில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த அவரது இந்தப் பேச்சு, பாளையங்கோட்டை கூட்டத்தில் திரண்டிருந்த தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.