தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பக்கம் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சு வார்த்தை என மும்முரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதனிடையே விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதே சமயம் சமீபத்தில் நடந்த கரூர் துயரத்தில் விஜய்க்கு சட்டரீதியாக பல சிக்கல்கள் வந்த நிலையில் அதனை பொறுமையாக கையாண்டு மீண்டும் கட்சியை மீட்டெடுத்துள்ளார். அடுத்தடுத்து கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளை விஜய் தீவிரப்படுத்தி உள்ளார்.
கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் கட்சியில் தொண்டர் அணி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் சேர்த்து 468 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நாளை நவம்பர் 2 பனையூர் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டும் விஜய் பரப்புரையை தொடங்குவது குறித்து விவாதிக்கப்படலாம் என தெரிகிறது
