கும்பகோணம் 4 ரோடு பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றுமாறு கூறிய காவல்துறை அதிகாரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தமிழக வெற்றிக் கழக (TVK) நிர்வாகிகள் காளி மற்றும் அருண் ஆகிய இருவர் போலீஸாரைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தத் தாக்குதலில் காவலரின் கை உடைந்ததை அடுத்து, தலைமறைவாக இருந்த இரு நிர்வாகிகளையும் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பேனர்கள் வைக்கக் கூடாது என்று அக்கட்சியின் தலைமை ஏற்கனவே தன் தொண்டர்களுக்குக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருந்த நிலையிலும், தலைமைப் பண்புக்கு முரணாகச் செயல்பட்டு சட்டம் ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்திய இந்த இரு TVK நிர்வாகிகளின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
