அடுத்த அதிரடி… இரவோடு இரவாக தவெக மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் முக்கிய உத்தரவு….!

By Nanthini on கார்த்திகை 29, 2025

Spread the love

தமிழகத்தில் நாளுக்கு நாள் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தேர்தல் களமும் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தது பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதிமுகவில் இருந்த நீக்கப்பட்ட செங்கோட்டயன் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று அனைவரும் காத்திருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அவர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தார். அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கட்சியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் பூத் ஏஜெண்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியில் விஜய் தீவிரம் காட்டி வருகின்றார். பூத் ஏஜெண்டுகளுக்கான விண்ணப்பங்களை விரைவில் பூர்த்தி செய்து தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக வெற்றி கழகம் தரப்பிலிருந்து மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பறந்துள்ளது. ஒவ்வொரு பூத்துக்கும் ஒரு ஏஜென்ட் என்ற எண்ணிக்கையை 10 ஆக உயர்த்த தமிழக வெற்றிக்கழகம் அண்மையில் அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில் பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன.