அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார் விஜய். கடந்த மாதம் செப்டம்பர் திருச்சியில் முதன்முதலாக சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவர் நாகப்பட்டினம், திருவாரூர், கரூர் பகுதிகளில் மக்களை சந்தித்தார். கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தார்கள். இந்த சம்பவத்துக்கு பிறகு அவருடைய சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இதனையடுத்து தவெக சார்பாக அரங்க கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் மட்டுமே விஜய் பங்கேற்றார்.
காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 2000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டதில் கலந்து கொண்டு பேசினார். இதற்கிடையில் புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டார். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு மக்கள் சந்திப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை உப்பளத்தில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதற்காக தவெக சார்பில் சில வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், விஜய் பரப்புரையின்போது சுற்றுச்சுவர், மரம், வாகனங்களில் ஏறக் கூடாது. கட்டடங்கள் மீது எற கூடாது., மின்கம்பங்கள் அருகே செல்ல கூடாது. கர்ப்பிணிகள், சிறுவர்கள், முதியவர்கள் வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நடிகை த்ரிஷா தனது பிறந்தநாளை மே 4-ம் தேதி கொண்டாடினார். அதே நாளில் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்'…
தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய பரபரப்பான சூழலில், அதிமுக-வின் மூத்த தலைவர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களின் போது, தமிழக வெற்றிக் கழகத்தினர் பேரறிஞர் அண்ணாவின் சிலையின் கையில் தங்கள் கட்சியின்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அமைச்சரவையை அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில், பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அகிலேஷ் யாதவ்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், பெரும்பான்மைக்குத் தேவையான 10 இடங்களுக்குப் பல்வேறு கட்சிகள்…