மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒரு பயங்கரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டியூஷன் ஆசிரியர் ஒருவர் குழந்தைகளுக்கு டியூஷன் நடத்தி வந்த நிலையில் அவரிடம் பயின்று வந்த ஒரு குழந்தையின் கையெழுத்து மோசமாக இருந்ததால் கோபமடைந்த டியூஷன் ஆசிரியர் ராஜஸ்ரீ ரத்தோட் எரியும் மெழுகுவர்த்தியை அந்த குழந்தையின் கையில் வைத்துள்ளார். இதனால் குழந்தையின் கை மோசமாக எரிந்துள்ளது. இதனை அடுத்து குழந்தை வீட்டிற்கு வந்து தன்னுடைய பெற்றோரிடம் கூறிய நிலையில் குழந்தையின் தந்தை போலீசில் புகார் அளித்ததன் பெயரில் காவல்துறையினர் ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளார்கள்.
காவல்துறையினரிடம் இருந்து கிடைத்த தகவலின் படி, பாதிக்கப்பட்ட குழந்தை மூன்றாம் வகுப்பு படித்து வருகிறது. ஒவ்வொரு மாலையும் டியூஷனுக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று அந்த குழந்தையின் சகோதரி அழைக்க வந்தபோது குழந்தை அழுது கொண்டிருப்பதையும், வலது கையில் பலத்த தீக்காயங்கள் இருப்பதையும் பார்த்துள்ளார். அது குறித்து ஆசிரியரிடம் கேட்டபோது “அவன் சும்மா நடிக்கிறான்” என்றும் கூறியுள்ளார் .
ஆனால் வீட்டுக்கு வந்ததும் குழந்தை தன்னுடைய தந்தையிடம் கையெழுத்து மோசமாக இருந்ததால் டியூசன் ஆசிரியை கையில் மெழுகுவர்த்தியை ஏற்றியதாக கூறியுள்ளார். இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் ஆசிரியரரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியின் வேட்பாளராக இயக்குநர் சுந்தர்.சி களமிறங்கியுள்ள நிலையில், அவரை எதிர்த்து நடிகர் பிரகாஷ் ராஜ்…
அரசியல் மேடைகளில் மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை, ஆனால் அது சில நேரங்களில் விபத்தாக முடிந்துவிடுவதுண்டு. முன்னொரு காலத்தில் ராகுல்…
தமிழக அரசியலிலும் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் விவாகரத்து விவகாரம், தற்போது இறுதிக்கட்டத்தை…
சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருந்த நிலையில், யாரோ ஒரு நபர் அனுப்பிய ஒரு…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…
இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…