அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வலதுசாரி வானொலி தொகுப்பாளர் மைக்கேல் சாவேஜின் ‘சாவேஜ் நேஷன்’ பாட்காஸ்டின் சர்ச்சை பதிவுகளை மீண்டும் பகிர்ந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானாகவே குடியுரிமை வழங்கும் ‘பிறப்புரிமை குடியுரிமை’ (Birthright Citizenship) சட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ள சாவேஜ், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளை “நரகக் குழிகள்” (Hell-holes) என்று இழிவுபடுத்தியுள்ளார். இந்தப் பதிவை டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருப்பது அவரது கடுமையான குடியேற்றக் கொள்கையின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது.
சாவேஜின் அந்தப் பதிவில், இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் ஒன்பதாவது மாதத்தில் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காகவே அமெரிக்காவிற்கு வருவதாகவும், அந்தச் சட்டம் அவர்களை உடனடி அமெரிக்கக் குடிமக்களாக மாற்றிவிடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்திய மற்றும் சீனக் குடியேறிகளை “மடிக்கணினிகளுடன் கூடிய குண்டர்கள்” (Thugs with laptops) என்று சாடியுள்ள அவர், இவர்கள் அனைத்து மாஃபியா குடும்பங்களும் செய்ததை விட இந்த தேசத்திற்கு அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தனது இனவெறிப் பேச்சைத் தொடர்ந்துள்ளார்.
கலிபோர்னியாவில் உள்ள உயர்தொழில்நுட்ப நிறுவனங்களில் “வெள்ளையர்களுக்கு” வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு பூஜ்ஜியமாக இருக்கும் வரை தான் இந்தியாவின் ஆதரவாளராக இருக்க முடியாது என்று சாவேஜ் குறிப்பிட்டுள்ளார். குடியேறியவர்கள் அமெரிக்கக் கொடியை மிதிப்பதாகவும், நாட்டை முழுமையாகச் சூறையாடி அமெரிக்கர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துவதாகவும் அவர் அந்தப் பதிவில் வன்மத்தைக் கக்கியுள்ளார். இந்த விவகாரத்தை நீதிமன்றங்களுக்கு விட்டுவிடாமல், தேசிய பொது வாக்கெடுப்பு மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவையும் சீனாவையும் இழிவுபடுத்தும் விதமான இந்த ‘நரகக் குழி’ ஒப்பீடு குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால், “நாங்கள் சில அறிக்கைகளைப் பார்த்தோம். இத்துடன் இதை நான் விட்டுவிடுகிறேன்,” என்று மிகவும் சுருக்கமாகத் தனது பதிலை முடித்துக்கொண்டார். அமெரிக்க அதிபரின் இந்தப் பதிவு, அங்கு வாழும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளில் விரிசலை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…