சட்டசபைக்குள் அண்ணாமலை வரக்கூடாது… ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி – நயினார்… போட்டுடைத்த திருச்சி சூர்யா… தமிழக அரசியலில் பரபரப்பு…!

Spread the love

பாஜக முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யா, அண்ணாமலைக்குச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதன் பின்னணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவின் நயினார் நாகேந்திரனும் இணைந்து செயல்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அண்ணாமலை சட்டசபைக்குள் நுழைவதை இருவரும் விரும்பவில்லை என்றும், அதற்கேற்பவே திட்டமிட்டு காய்கள் நகர்த்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், நயினார் நாகேந்திரன் பாஜக மாநிலத் தலைவரைப் போலச் செயல்படாமல், எடப்பாடி பழனிசாமியின் எண்ணப்படியே செயல்படுவதாக அதிரடி புகாரை முன்வைத்துள்ளார்.

பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகத் தாமதமானதற்கு அண்ணாமலையே காரணம் என்று கட்சியின் உள்ளேயே பலருக்கு வருத்தம் இருந்ததாகத் திருச்சி சூர்யா குறிப்பிட்டுள்ளார். நயினார் நாகேந்திரன் தமக்குத் தேவையான இடங்களைத் திட்டமிட்டுப் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால் பாஜக வலுவாக இல்லாத தொகுதிகளைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் கட்சிக்கு மறைமுகப் பலவீனத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார். அண்ணாமலைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மற்றும் நயினார் நாகேந்திரன் இணைந்து செயல்பட்டதே இந்தப் பின்னடைவுக்கு முக்கியக் காரணம் என்பது அவரது வாதமாக உள்ளது.

அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய அவர், மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகியபோது அண்ணாமலை ராஜ்யசபா எம்.பி பதவி அல்லது மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்த்ததாகக் கூறியுள்ளார். ஆனால், அமித் ஷாவோ அவரைத் தொடர்ந்து மாநில அரசியலிலேயே வைத்திருக்க விரும்பியுள்ளார். மேலும், அண்ணாமலை ஒரு சுயநலவாதி என்றும், தன்னுடன் இருந்தவர்களுக்குக் கூட உதவ முன்வராததால் இப்போது அவரே அதன் வினையை அனுபவித்து வருவதாகவும் திருச்சி சூர்யா சாடியுள்ளார். அண்ணாமலையை நம்பி வந்த எஸ்.ஜி.சூர்யா, வினோஜ் பி செல்வம் போன்ற இளைஞர்களுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு அண்ணாமலையே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளைப் பெற்றிருந்தாலும், வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிமுக தனது வேட்பாளர்களை அறிவித்துப் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்ட நிலையில், பாஜகவின் பட்டியல் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. தற்போது வெளியான பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம்பெறாதது, திருச்சி சூர்யா கூறியுள்ள அரசியல் உள்விவகாரங்கள் மற்றும் கூட்டணிக்குள்ளான பனிப்போரை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Nanthini

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

5 மணத்தியாலங்கள் ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

6 மணத்தியாலங்கள் ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

6 மணத்தியாலங்கள் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

6 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

7 மணத்தியாலங்கள் ago